News Update :

Tamilnadu News

Political

India

Economy

Technology

World News

Cinema News

ட்விட்டர் ஜோக்

Tuesday, November 12, 2013

கற்பழிப்புகள் நாடு முழுதும் பெருகி வரும் நிலையில் பெரிய அரசியல்வாதிகளெல்லாம் கற்பழிப்பு பற்றி எந்த கருத்தையும் கூறுவதிலிருந்து தங்களை விலக்கிக் கொண்ட சூழலில் ட்விட்டர் பதிவு ஒன்றில் வெளியான படு மோசமான ஜோக் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

அந்த ஜோக்கின் தமிழாக்கம் இதோ: “பெண்கள் ஏன் கற்பழிப்பு குறித்து பயப்படவேண்டும்? உங்களை அனுபவிப்பதற்காகவே ஒருவன் வாழ்நாள் முழுதும் சிறையில் வாடும் ரிஸ்க்கை எடுக்கிறான் என்றால் அதனை நினைத்து கர்வம் அடையுங்கள்” என்பதுதான் இந்த வாசகம். இது ஜோக்கா என்பதே சந்தேகமாக உள்ளது. ஒரு மட்டித்தன்மான வாசகம் அவ்வளவே.

இந்த ட்விட்டருக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் குவிந்தன. எல்லோரும் அந்த நபரை பிடித்து வாங்கு வாங்கென்று வாங்கித் தள்ளியுள்ளார்கள்.

உண்மையில் இந்த ட்விட்டர், பேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்கள் என்ன செய்கின்றன?எழுதத் தெரியாதவர்களெல்லாம் ஏதோ உளற வேண்டியது அதற்கு இவ்வளவு லைக்குகள் என்று அசட்டுப் பெருமிதம் வேறு! எதையாவது உளறி ஏதோ ஒரு குறிப்பிட்ட குழுவிலாவது தனது பிராபல்யத்தை ஏற்படுத்திக் கொள்வது தவிர அங்கு என்னதான் பெரிதாக நடந்து விடுகிறது?

இந்திய நாட்டை உலுக்கும் பொருளாதார வறுமையை விட காமவறுமை பெரிதாகவே இருக்கிறது.

இந்த நிலையில் பெண்களை அவமானப்படுத்தும் இத்தகைய ஜோக்குகள் அல்லது வாசகங்கள் இன்னும் எவ்வளவு மோசமானவை என்பதை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். கற்பழிப்பில் ஈடுபடும் காமாந்தகர்களை விட அவற்றை தள்ளி நின்று இதுபோன்று அசட்டுப்பிசட்டு கருத்து உதிர்ப்பவர்கள்தான் தண்டனைக்குரியவர்கள்!



தி கான்ஜுரிங்!

Friday, September 27, 2013

ஹாலிவுட்டில் ஹாரர் பட்டியலில் வருகின்ற சமீபத்திய திரைப்படங்கள் யாவும் முகம் சுளிக்க வைக்கும் கோரக் காட்சிகள், ஆபாசக் காட்சிகளைக் கொண்டுதான் திகழ்கின்றது. விஎஃப்க்ஸிர்க்கும், மேக்கப்பிற்கும் முக்கியத்துவம் தரும் அளவிற்கு கதைக்கோ, கதை மாந்தர்களுக்கோ அளிக்கப்படுவதில்லை. சமீபத்தில் வெளியாகிய ‘ஈவில் டெட்(2013)’, ‘ஹேட்செட்-3’, ‘டெக்ஸ் செயின்’, ‘சா,’ ‘மாஸெகர்’ இதற்கொரு சாம்பிள்.

திரைக்கதையை ஒளி-ஒலி அமைப்பை சாதுர்யமாக கையாண்டு ரசிகர்களை திகிலடையச் செய்வதில் பலே கில்லாடி ‘ஜேம்ஸ் வான்’. இவர் இயக்கிய ‘சா’, ‘இன்சீடியஸ்’, ‘டெட் சைலன்ஸ்’ முதலிய படங்கள் கதையிலும் கையாளப்பட்ட விதத்திலும் தனித்தன்மை பெற்று விளங்கியது. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் அமைந்ததாக எடுக்கப்பட்டுள்ள ‘தி கான்ஜுரிங்’ திரைப்படமோ ‘எக்ஸார்ஸிஸம்’, ‘இன்சீடியஸ்’, ‘போல்டர் கீஸ்ட்’ முதலிய படங்களின் உட்டாலக்கடியாகத் தான் திகழ்கின்றது. என்ன ஒரு வித்தியாசம் முந்தைய படங்களில் நிகழ் காலத்தில் உரைக்கப்பட்ட கதை இப்படத்தில் பீரியாடிக் நிகழ்வாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

இது வழக்கமான பேய்பட கதைதான். ஒரு பழைய வீட்டுக்கு புதிதாக குடிபோகிறது ஒரு குடும்பம். அந்த வீட்டுக்குள் இருக்கும் தீயசக்தி அவர்களை எப்படி ஆட்டிப்படைக்கிறது. அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்கிற கதை. ஜேம்ஸ் வான் டைரக்ட் செய்திருக்கிறார். வேரா பார்மிங்கா, பேட்ரிக் வில்சன் நடித்திருக்கிறார்கள்.

புதிதாக ஒரு பெரிய வீட்டிற்குள் குடியேறும் மிடில் ஏஜ் தம்பதியினர் அவர்களின் ஐந்து மகள்கள். வீட்டிற்குள் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் இவர்களை ஸ்தம்பிக்கச் செய்கிறது. பாதாள அறை, மரக் கப்போர்டின் பின் ஒளிந்திருக்கும் பாதை, இப்படி வீட்டைச் சுற்றி பல மர்மங்கள். வீட்டிலிருக்கும் நாய் இறக்கிறது. அடுத்தடுத்து வீட்டிலுள்ள அனைவரும் பல திக் திக் அனுபவங்களை சந்திக்கின்றனர். கண்டிப்பாக வீட்டில் அமானுஷ்ய சக்தி ஒளிந்திருப்பதை வீட்டார்கள் உணர, ஹாரர் ஹன்டர், லாரைன் மற்றும் எட்வாரன் தம்பதியினரின் துணையை நாடுகின்றனர்.

வீட்டிற்கு வந்து ஆய்வு செய்யும் இத்தம்பதியினர், வீட்டிலுள்ள மனிதர்கள் மீது அமானுஷ்ய சக்திகளின் தடம் பதிந்துள்ளதாகவும் இவர்கள் வீட்டை விட்டு வெளியேறினாலும் அது இவர்களை விடாது என அதிர்ச்சி அடைய வைக்க, மேலும் இதற்கு ஒரே விடை எக்ஸார்ஸிஸம் தான் ஆனால், இதன் முடிவுகள் விபரீதமாக அமையும் என எச்சரிக்கின்றனர். கடைசியில் பேயை விரட்டினார்களா, குடும்பம் தப்பித்ததா என்பது மீதம்.
மனித நடமாட்டம் குறைந்து காணப்படுகின்ற ஒரு கிராமம். அங்கே ஒரு நதி. அதன் அருகே பெரிய ஆலமரம், சுற்றி நிசப்தம். இந்த சூழலில் அமைந்திருக்கும் ஒரு பூத் பங்களா. போதாக்குறைக்கு 1970ல் நடக்கும் கதையென்பதால் விஞ்ஞான ரீதியில் பெரிய தொலைத் தொடர்பும் அமையப் பெற முடியாத ஒரு சூழல். கதைக்கேற்ற கதைக்களத்தை அமைத்ததிலேயே ‘ஜேம்ஸ் வான்’ முதல் வெற்றி பெறுகிறார்.

பேய் வரும் காட்சியை விட, அதற்கு கொடுக்கப்படுகின்ற பில்டப் காட்சிகள் தான் திகிலாக அமைந்துள்ளது. முகமெங்கும் வெள்ளை நிற பெயின்ட் அடித்து வருகின்ற பேயைப் பார்க்கும் போது சிரிப்பு எழுகின்றது.
படத்தில் அமையப் பெற்றிருந்த கலர் டோனே படத்திற்கு பெரிய பலம். யாவரும் நலம் திரைப்படத்தில் காணப்பட்ட ஒரு விதமான டார்க் வைட் டோனில் படம் முழுவதும் அமைந்துள்ள விதம், தேவையற்ற ஆப்ஜெட்களின் மீது மனதை சிதறடிக்காமல் கதையோடு தங்க வைக்கிறது. ‘ஜேம்ஸ் வான்’ இயக்கிய அனைத்து பேய் படங்களிலும் இதைப் போன்ற நிழற்படம் அமைந்திருக்கும்.

படத்தில் வரும் பல காட்சிகள் ஜேம்ஸ் வான் முன்பு இயக்கிய ‘இன்சீடியஸ்’ திரைப்படத்தின் கூடுதல் பிம்பமாக விளங்குகிறது. வீட்டிற்குள் பேய் இருப்பதை உணர்ந்து நாய் குரைப்பது, ஆங்காங்கே கதவு டப் டப் என்று அடித்துக் கொள்வது, தொலைக் காட்சி தானாக இயங்குவது இதைப் போன்று பழக்கப்பட்ட சில க்ளீச்சே காட்சிகள் அமைந்திருந்தாலும், படமாக்கிய விதத்திலும், கதாபாத்திரங்களின் நடிப்பிலும் ‘தி கான்ஜுரிங்’ வேறுபட்டு நிற்கிறது.

மொத்தத்தில் தேவையற்ற ரத்த கோரங்களோ, ஆபாசமோ திணிக்கப்படாமல் ரசிகர்களை சீட்டின் நுணியில் அமர வைத்து அலற வைக்கும் ப்யூர் ஹாரர்.

இந்தப் படத்தை பார்த்துவிட்டு ரஜினி மகள் ஐஸ்வர்யா, "நான் இரண்டு நாள் இரவில் வீட்டைவிட்டே வெளியில் வர பயந்தேன். இரவில் தூக்கம் இல்லாமல் தவித்தேன்." என்று டூவிட்டரில் எழுத ஏகத்துக்கு படம் எகிறிவிட்டது.

சென்னை மால் தியேட்டர்களில ஒரு வாரத்துக்கு ஹவுஸ்புல்லாகி இருக்கிறது.
ஆரம்பத்தில் சாதாரண திகில் படம்தானே என்று ரிலீஸ் பண்ணியவர்கள், இப்போது படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்துவிட்டு தமிழில் வேகவேகமாக டப் செய்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் தமிழில் ரிலீசாக இருக்கிறது. எல்லோரும் பயப்பட தயாராக இருங்கள்.

புதிய கண்டு பிடிப்பு-பெரம்பூர் +1 மாணவியர்

Thursday, September 26, 2013

கொசுக்களை ஒழிப்பதற்கான புதிய கருவியை பெரம்பூரில் உள்ள கல்கி அரங்கநாதன் மான்ட்போர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கொசுக்களை கவர்ந்திழுத்து மின்சாரத்தின் உதவியால் அழிக்கும் இந்த புதிய கருவியை பள்ளியின் ஆசிரியர் எஸ்.அல்போன்ஸ் வழிகாட்டலில் 11-ஆம் வகுப்பு மாணவிகள் ஐ.அபிராமி, டி.ஒபிலியா, வி.தேன்மொழி ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இந்தக் கருவியின் செயல்பாடுகள் குறித்து மாணவிகள் சனிக்கிழமை செயல் விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:


மனித உடலில் இருந்து வெளியேறும் வாசனையை, திரவம் மூலம் உருவாக்கி, கொசுக்களை கவர்ந்திழுத்து அழிக்கும் புதிய கருவியை, தனியார் பள்ளி மாணவியர் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை, பெரம்பூர், கலிகி ரங்கநாதன் மான்ட்போர்டு மெட்ரிக் பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் ஒப்பிலியா, தேன்மொழி, அபிராமி ஆகிய மூன்று மாணவியர், மிக மிக குறைந்த செலவில் கொசுவை ஒழிக்கும் கருவியை கண்டுபிடித்து உள்ளனர்.இந்த புதிய கருவியின் செயல்பாடு குறித்து மாநகராட்சி மேயர் சைதை துரைசாமிக்கு, அவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

அப்போது மாணவியர் கூறியதாவது:மனித உடலில் இருந்து வெளியேறும் வெப்பம், கார்பன் டை ஆக்சைடு, வியர்வையில் இருந்து வெளிப்படும் வாசனை மூலம் கொசுக்கள் மனிதர்களை அடையாளம் கண்டுபிடித்து, கடிக்கின்றன. அதன் அடிப்படையில் தான் இந்த கருவி தயாரிக்கப்பட்டுள்ளது.

*செவ்வக வடிவில் பெட்டி போன்று காணப்படும் இந்த கருவியில், இரண்டு பக்கங்களிலும் கம்பி வலைகள் உள்ளன. அந்த வலைகளில் 20 முதல் 40 வாட் வரை மின்சாரம் பாய்ச்சப்படும்.

*பெட்டியின் கீழ்ப்பக்கத்தில் மூன்று திரவங்களை கொண்ட கண்ணாடி குடுவை பொருத்தப்பட்டுள்ளது.

*இரண்டு துளைகள் கொண்ட ரப்பர் அடைப்பான் மூலம் அந்த குடுவை மூடப்பட்டுள்ளது.

*ஒரு துளை வழியாக காற்றை குடுவைக்குள் செலுத்தும் போது, திரவம், கம்பி வலை வழியாக வாயுவாக வெளியேறும்.

*இந்த வாயு, மனித உடலில் வியர்வை வாசனை போன்று இருக்கும். அந்த வாசனையால், கவரப்படும் கொசுக்கள், கம்பி வலையை நோக்கி ஈர்க்கப்படும். மின்சாரம் தாக்கி அழியும்.

இந்த கருவியை தயாரிக்க, 1,750 ரூபாய் செலவாகும். திரவ கலவை 50 மி.லி., அளவு, 30 ரூபாய் ஆகும். இந்த கலவை இரண்டு மாதங்களுக்கு பயன்படும்.கருவிக்கு ஐந்து ஆண்டுகள் வரை உத்தரவாதம் தரலாம்.

கருவியில் இரவு நேர மின்விளக்கும் பொருத்திக் கொள்ளலாம்.தற்போது கடைகளில் விற்கப்படும் கொசு ஒழிப்பு மருந்துகள் மனிதர்களுக்கு நுரையீரல் பாதிப்பு உட்பட, பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இந்த திரவ கலவை அதுபோன்ற பாதிப்பை ஏற்படுத்தாது. அதற்கு உரிய சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.இவ்வாறு மாணவியர் விளக்கம் அளித்தனர்.

கருவியின் செயல்பாடுகளை கேட்டறிந்த மேயர் சைதை துரைசாமி, கருவி தயாரிப்பு செலவை குறைக்க மாணவியருக்கு அறிவுரை வழங்கினார்.

இதுகுறித்து மாணவியர் கூறுகையில், ‘தற்போது இந்த கருவி, பிளைவுட் மூலம் செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டால் செலவு இன்னும் குறையும்’ என்றனர்.

ஒரு கண்ணோட்டம் - திருச்சியில் நரேந்திர மோடியின் பேச்சு.

பாஜகவின் இளைஞர் அணி சார்பில் நடைபெறும் இளந்தாமரை மாநாடு திருச்சியில் ஜி. கார்னர் மைதானத்தில் வியாழக்கிழமை மாலை துவங்கியது. மாநாட்டில், பாஜக இளைஞர் அணி செயலர் அனுராக் தாக்கூர்  துவக்க உரை ஆற்றினார்.

அவரது உரையைத் தொடர்ந்து பாஜக மாநில நிர்வாகிகள் உரையாற்றி வருகின்றனர்.

தொடக்கத்தில் இன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பலியான நமது ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நிமிடம் உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்த படியே மௌனம் அனுஷ்டிக்கக் கோரினார் மோதி.  பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்,  அலைபாயும், கூச்சல் போடும் கூட்டத்தை அமைதிப் படுத்தி தன் நிலைக்குக் கொண்டு வந்து பேச்சில் கவனம் குவிக்கவும் இது உதவியது. பேசப் போகிற விஷயம் கைதட்டலுக்கானது மட்டுமல்ல, கவனத்திற்கானது என்று அறிவிப்பது போலிருந்தது இது.

"தாய்மார்களே பெரியோர்களே என்று தமிழில் தனது பேச்சைத் தொடங்கினார் மோடி. வாலி சிங்கங்களே என்றார் மோடி. வாலிப என்று திருத்திக் கொடுத்தார் ராஜா.

"தமிழ்நாடு பெருமை உடைய நாடு. கம்பன் வள்ளுவர் பிறந்த பூமி. தமிழ்நாடு என்று சொன்னால், காதில் தேன் வந்து பாயும் என்று பாடினார் பாரதியார். திருச்சி தமிழ்நாட்டின் இதயம் போல் மத்தியில் இருக்கும் மாவட்டம். மலைக்கோட்டையும் காவிரியும் அலங்கரிக்கும் மாவட்டம் சோழர் தலைநகராக உறையூர் இருந்தது திருச்சி. இந்த நகரில் வசிக்கும் மற்றும் இங்கு வந்துள்ளவர்கள் அனைவருக்கும் மீண்டும் வணக்கம் என்றார் தமிழிலேயே பேசத் தொடங்கிய மோடி.

"ராமலிங்கம் பிள்ளை சொல்லியிருக்கிறார்... தமிழர் என்றோர் இனம் உண்டு. தனியே அவர்க்கோர் குணம் உண்டு என்றார்.. தமிழகத்தில் உரையாற்றுவதில் நான் பெருமை கொள்கிறேன்; தமிழர்கள் கடின உழைப்பாளிகள், புத்திசாலிகள், மற்றவரை மதிப்பவர்கள் என்றெல்லாம் கூறினார்.

”கம்பனும் வள்ளுவனும் பாரதியும் பிறந்த தமிழ் மண்ணிற்கு வருகை தருவதை மதிப்புக்குரிய விஷயமாகக் கருதுகிறேன். தமிழ் மக்களிடம் மூன்று நல்ல குணங்கள் உண்டு – கடும் உழைப்பு, சிரத்தை, ராஜகம்பீரம் & விசுவாசம். தமிழகத்தின் பொருட்கள் தேசிய, உலக சந்தைகளில் தரம் வாய்ந்தவையாக உள்ளன. தமிழ் மக்களின் உழைப்பினால் தமிழ்நாடு இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது, தமிழ் மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்த மொழி” – இவ்வாறு தமிழ்ப் பண்பாட்டுக்கும் மக்களுக்கும் புகழாரம் சூட்டித் தனது உரையைத் தொடங்கினார்.

அடுத்து, குஜராத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள உறவுகளை, ஒற்றுமைகளைப் பட்டியலிட்டார். ”இரண்டும் கடற்கரைகள் கொண்ட மாநிலங்கள். பருத்தியை அதிகமாக விளைவிக்கிறது குஜராத், அதைப் பெருமளவு நுகர்ந்து ஆடையாக நெய்கிறது தமிழகம். குஜராத் காந்தியின் மனசாட்சியாக தமிழகத்தின் ராஜாஜி இருந்தார்.

 தமிழ் மக்கள் குஜராத்திற்குப் புலம்பெயர்ந்து அதன் வளர்ச்சிக்கு உதவுவது போலவே, சௌராஷ்டிரர்களான குஜராத்திகள் தமிழ்நாட்டில் பல காலமாக இருக்கிறார்கள்.  பாலில் சர்க்கரை கலந்தது போன்ற இனிய உறவு அது. இங்கு சென்னையில் குஜராத்திகள் அதிகமாக வசிக்கும் சௌகார்பேட்டை போல குஜராத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மணிநகர். எனது சட்டசபைத் தொகுதி அது. அங்குள்ள தமிழர்கள் தான் தொடர்ந்து வாக்களித்து என்னைத் தேர்ந்தெடுத்து வருகிறார்கள்” என்று  நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இது ஒரு சாதாரண அரசியல்வாதி பேசும் பேச்சல்ல. இந்த தேசத்தின் மீது, மண்ணின் மீது, காலகாலமாக இருந்து வரும் அதன் சமூக, கலாசார பந்தங்களின் மீது ஆழமான பிடிப்பும், அன்பும் கொண்ட ஒருவரின் பேச்சு. எண்ணமும், செயலும் எல்லாம் இந்த தேசத்தை ஒற்றுமைப் படுத்துவதற்காகவே, இந்த தேசமக்களின் நல்வாழ்விற்காகவே இயங்கும் ஒரு தேசபக்தனின் பேச்சு. எத்தனை உரை எழுத்தாளர்களை வைத்துக் கொண்டாலும் காங்கிரசின் முட்டாள் இளவரனிடம் இருந்தோ, அல்லது மற்ற  சுயநல அரசியல்வியாதிகளின் வாயிலிருந்தோ இப்படி ஒரு பேச்சு சுட்டுப் போட்டாலும் வராது.

குஜராத்தின் மீனவர்களை பாகிஸ்தான் பிடித்துச் சென்று சித்ரவதை செய்வதையும், தமிழக மீனவர்களை இலங்கை அதே போன்று செய்வதையும் குறித்து அடுத்துப் பேசினார்.. இந்த நாடுகள் இப்படித் துளிர்த்துப் போய் விட்டதற்கு இடையே உள்ள கடல் நீர் காரணமல்ல,  தில்லியில் உள்ள பலவீனமான அரசும் அதன் கொள்கைகளுமே காரணம்.  இலங்கை அரசு தமிழக மீனவர்களைக் கொல்கிறது. பாகிஸ்தானிய ராணுவம் நமது ராணுவ வீரர்களைக் கொல்கிறது.. பயங்கரவாதம் அபபவியான பொதுமக்களைக் கொல்கிறது, பூடான், இலங்கை, நேபாளம் போன்ற சிறிய நாடுகள் கூட இந்தியாவை மதிப்பதில்லை. இதற்கெல்லாம் காரணமான அந்த பலவீனமான அரசை அகற்ற வேண்டும் – என்று முழங்கினார்.

அமெரிக்கா தனது மண்ணில் அநியாயமாக உளவறிந்து வருவதை அறிந்து, அந்த நாட்டுடனான ராஜரீக தொடர்புகள் அனைத்தையும் பிரேசில் துண்டிக்கிறது. தனது நாட்டின் தேசதுரோகியான ஸ்னோடன் என்பவருக்கு ரஷ்யா அடைக்கலம் கொடுத்ததால், தனது ரஷ்யப் பயணத்தையே அமெரிக்க அதிபர் ஒபாமா ரத்து செய்தார். இதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றோம்? நமது பிரதமரோ பயங்கரச் செயல்கள் நடந்து கொண்டிருக்கும் போதும் கூட தொடர்ந்து பாகிஸ்தானிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார், அதன் அரசியல் தலைவர்களூடன் உட்கார்ந்து சிக்கன் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்..  இந்த செயலை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? என்று கூட்டத்தைப் பார்த்து கேட்டார்.  இல்லை என்று பெரும் எதிரொலி வந்தது.

அடுத்து, காங்கிரஸ் அரசு ஏற்படுத்தியுள்ள பொருளாதார சீரழிவு குறித்து பேசினார்.

“இதே நிலை நீடித்தால் இன்னும் 5 ஆண்டுகள் நீடித்தால் இப்போது நல்ல வேலையில் இருக்கும் இளைஞர்கள் சாலையோரங்களில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப் படுவார்கள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவதை சுட்டிக்  காட்டினார். ”அரசின் தவறான கொள்கைகளால் தொழில்கள் அழிகின்றன.  பெரும் வணிக முதலைகளுக்கு உதவும் அரசு, சிறிய தொழில் முனைவர்கள் வாங்கிய கடனைத் திருப்பித் தர முடியாமல் போனால் அவர்களது பெயர்களை செய்தித் தாளில் விள்ம்பரப் படுத்தி அவர்களை அவமதித்து தற்கொலை வரை கொண்டு தள்ளுகிறது.  இந்தக் கொள்கைகள் மாற்றப்பட்டு  லட்சக்கணக்கான கோடிக்கணக்கான சிறீய தொழில்கள் வளர்க்கப் பட்டு அதன் மூலம் நமது இளைஞர்கள் மதிப்புக்குரிய வேலைவாய்ப்புகளைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் வகையில் எங்களது அரசின் திட்டங்கள் இருக்கும்.

ஊழல் நமது பொதுவாழ்வை அழிக்கிறது. ஏழை மக்களைச் சென்று சேர வேண்டிய பணம் ஊழலில் வீணாகிறது. ஆதார் அட்டை என்ற திட்டம் குறித்த ஐயங்களை மூன்று வருடம் முன்பே நான் தெரிவித்தேன், அதே விஷயங்களை இப்போது உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்கிறது.  பண விரயம் மட்டுமல்ல, நாட்டின் பாதுகாப்பையே கேள்விக் குறியாக்கும் வகையில் இந்த ஆதார் அட்டை முறைகேடுகள் உள்ளன.

காங்கிரசின் அரசியல் எப்போதும் மக்களைப் பிளப்பதாக, பிரிப்பதாக இருக்கீறது. சாதி, மதம், கிராம – நகர வேறுபாடு என்று பல முனைகளில் தொடர்ந்து மக்களைப் பிரித்தாளும் கொள்கைகளை காங்கிரஸ் செயல்படுத்தி வருகீறது.  காங்கிரசைக் கலைக்க வேண்டும் என்று அன்று காந்தி சொன்னதை உண்மையாக்கும் வகையில் நாம் தேசத்திற்கு காங்கிரசிடமிருந்து விடுதலை அளிக்க வேண்டும்” என்றார்.

”இந்த மைதானம் நிறைந்து, அதற்குப் பின்னுள்ள பாலத்தைத் தாண்டியுள்ள மைதானமும் நிறையும் அளவுக்கு இளைஞர்களின் கூட்டம் இங்கு கூடியுள்ளது. அந்த இளைஞர்களை என்னால் பார்க்க முடியவில்லை.. மைதானம் சிறியது, அதில் இடமில்லாமல் போகலாம்., ஆனால் என் இதயத்தில் எப்போதும் உங்கள் அனைவருக்கும் இடம் உண்டு.

தமிழக அரசியலையும் தேசிய அரசியலையும் அறிந்தவர்கள் இளைஞர்களின் இந்தக் கூட்டத்தைப் பார்த்தே இங்கு எவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கீறது என்பதைக் காண முடியும், பல முறை தமிழ் நாட்டுக்கு வந்திருக்கிறேன்,. இது போன்ற ஒரு இளைஞர் பெருந்திரளை இது வரை கண்டதில்லை, இங்கு வந்த அனைவருக்கும், ஏற்பாடு செய்த இளைஞர் அணியினருக்கும் மிக மிக நன்றி.

நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள், அந்த நம்பிக்கையை ஒருபோதும் உடைக்க மாட்டோம் என்று உறுதியளிக்கிறேன். எங்களது சக்தி அனைத்தையும் உங்களது முன்னேற்றத்திற்காக, நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவோம். நீங்கள் எனக்கும் பாஜகவுக்கும் புதிய நம்பிக்கையையும் வலிமை உணர்வையும் ஏற்படுத்தியுள்ளீர்கள். வந்தே மாதரம்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

இறுதியில் அனைவரும் முஷ்டிகளை உயர்த்தி வந்தே மாதரம் என்று முழங்கச் செய்தது சிலிர்ப்பூட்டுவதாக இருந்தது.

சிறப்பான நிகழ்ச்சி.  அருமையான உரை. தனிப்பட்ட அளவில், மோதி இன்னும் சில விஷயங்களையும் பேசியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. சேலம் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப் பட்டது குறித்து கட்டாயம் பேசப்பட்டிருக்க வேண்டும். பொன். ராதாகிருஷ்ணன் இலேசாக தன் பேச்சில் இதைச் சுட்டிக் காட்டினார்,

தமிழகத்தின் மின்சாரத் தட்டுப்பாடு,   இலங்கையில் தேர்தல் முடிந்த நிலையில் தமிழர்கள் மறுவாழ்வு குறித்த எதிர்பார்ப்புகள் ஆகிய விஷயங்கள் குறித்து ராஜ்நாத் சிங் பேசினார். அது போதாது. மோடியும் இந்த விஷயங்களைப் பேசியிருக்க வேண்டும்.

மொத்தத்தில் இது ஒரு மிக வெற்றிகரமான நிகழ்வு. மோடியின் திருச்சி விஜயம் கட்டாயம் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும், மோடி பிரதமராகப் போகும் வரலாற்றுத் தருணத்தில் தமிழகமும் தனக்குரிய பங்களிப்பை நல்கும் என்றும் நம்புவோம்.

திரு. நரேந்திர மோடி திருச்சியில் உரையாற்றி முடித்து விட்டார். சம்பிரதாயமாக தமிழில் ஆரம்பித்து, பிறகு ஹிந்தியில் மிக உணர்ச்சிகரமாக பேசினார். நடுவில் சில பகுதிகள் மட்டும் ஆங்கிலத்தில் இருந்தன. இயல்பாகவே மிகச் சிறந்த பேச்சாளர் மோடி. இந்த உரையும் அதற்கு விதிவிலக்கல்ல. தமிழக பாஜக தலைவர் ஹெச்.ராஜா நன்றாகவே மொழியாக்கம் செய்தார். ஆனால் மோடியின் குரலில் இருந்த உணர்ச்சிகள், ஏற்ற இறக்கங்கள் ஆகியவை ராஜாவின் மென்குரல் பேச்சில் கொஞ்சம் நீர்த்து விட்டன என்று தான் சொல்ல வேண்டும்.

களங்கமற்ற இறை நம்பிக்கை

Tuesday, September 24, 2013

களங்கமற்ற, முழுமையான இறை நம்பிக்கை, இறைவனை நம்மிடம் நேரில் கொண்டு வந்து காட்டும் என் பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி.

இவர், சோழ நாட்டில் தில்லையம்பலமான சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் அவதரித்தார். இங்குள்ள பொள்ளாப்பிள்ளையார் கோவில் மிகவும் பிரபலமானது. “பொள்ளா’ என்றால், உளியால் செதுக்கப்படாதது என்று பொருள்; அதாவது, தானாகவே தோன்றிய சுயம்பு விநாயகர் அவர்.

இந்த விநாயகருக்கு பூஜை செய்து வந்தார் நம்பியின் தந்தை; நம்பிக்கும் பூஜை முறைகளைக் கற்றுக் கொடுத் தார். ஒருநாள், அவர் தன் மனைவியுடன் வெளியூர் செல்ல இருந்ததால், மகனிடம், “இன்று, நீ போய் விநாயகருக்கு நைவேத்யம் செய்து பூஜை செய்து வா…’ என்றார்.

மகிழ்ச்சியடைந்த சிறுவன் நைவேத்திய பொருட்களுடன் கோவிலுக்குச் சென்றான். விநாயகரை வணங்கி நைவேத்யத் தைப் படைத்தான்.

“அப்பனே, விநாயகா! நான் சின்னஞ்சிறுவன். அப்பா ஊருக் குப் போய் விட்டார். உனக்கு தேங்காய், பழம், பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். ஒன்று விடாமல் சாப்பிடு. குருகுலத்துக்கு கிளம்ப வேண்டும். தாமதமாகச் சென்றால், ஆசிரியர் கோபிப்பார். விரைவில் சாப்பிடப்பா…’ என்றான்.

பிள்ளையார் என்றாவது சாப்பிட்டதுண்டா?

அவர் கல்லாக அப்படியே உட்கார்ந்திருந்தார். பையனுக்கு அழுகை வந்தது…

“இதோ பார்! நீ மட்டும் இப்போது சாப்பிடாவிட்டால் இந்தத் தூணில் முட்டி மோதி இறப்பேன்…’ என்று சொல்லியபடியே, தூணில் முட்டி அழுதான்.

அவனது களங்கமற்ற பக்தி விநாயகரை ஈர்த்தது. அவர் சன்னதியில் இருந்து எழுந்து வந்து, அவனைத் தடுத்து நிறுத்தினார். தும்பிக்கையால் நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க, காயம்பட்ட வடுவே மறைந்து விட்டது. நம்பியின் விருப்பப்படியே அத்தனை பொருட்களையும் ஒன்று விடாமல் சாப்பிட்டார்.

அவரிடம், “விநாயகா! எப்படியோ இன்று குருகுலம் செல்ல நேரமாகி விட்டது. நான் அங்கு சென்றிருந்தால் அவர் என்ன கற்றுக் கொடுத்திருப்பாரோ, அதை நீயே சொல்லிக் கொடேன்…’ என்றார் நம்பி.

அவனுக்கு அனைத்து ஞானத்தையும் போதித்து, மறைந்து விட்டார் விநாயகர்.

மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான் நம்பி. பெற்றவர்கள் ஊர் திரும்பியதும் நடந்ததையெல்லாம் சொன்னான். அவர்கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இந்த விஷயம் ராஜராஜசோழனுக்கு எட்டியது. அவன் நம்பியாண்டார் நம்பியின் இல்லத்துக்கே வந்துவிட்டான். விநாயகருக்கு நைவேத்யம் செய்து அவர் சாப்பிடுவதைக் கண்ணார கண்டு களிக்க வேண்டும் என்றான்.

அதன்படியே, கோவிலுக்குச் சென்று விநாயகரை சாப்பிட வைத்தார் நம்பி. மன்னனும், மக்களும் ஆச்சரியப் பட்டனர். அவரது மகிமையை உணர்ந்த மன்னன், தில்லையம்பலத்தில் பூட்டிக் கிடக்கும் அறையில் மூவர் பாடிய தேவாரமும், தொகையடியார்கள் வரலாறும் இருப்பதைச் சொல்லி, அவற்றை வெளியே கொண்டு வர ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டான்.

அதன்படி, அவர்கள் அங்கு சென்று புற்று மண்டிக்கிடந்த அறையில் இருந்து ஓலைச்சுவடிகளை எடுத்து வந்தனர். நம்பியாண்டர் நம்பி அவற்றை 11 திருமுறைகளாகப் பிரித்தார். அவை இன்றும் நமக்கு இசையின்பத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

குழந்தை போல களங்கமற்ற உள்ளங்களுக்கு கடவுள் தெரிவான் என்பதை நம்பியாண்டார் நம்பி வரலாறு உணர்த்துகிறது.

பெண்ணின் திருமண வயது....?

குடும்ப அமைப்புமுறையை சிறந்ததொரு முன்மாதிரியாக, உலக நாடுகளிடம் தொடர்ந்து பறைசாற்றிவரும் இந்தியாவில், திருமணங்களின் பங்கு முக்கிய இடத்தை வகிக்கிறது. திருமணபந்தமானது, நெடுங்காலமாக இந்திய பெண்களின் வாழ்வில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் பெண்ணுரிமைக்கும் திருமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

ஆனால், திருமணம் தொடர்பாக பொதுவான சட்டம் ஏதும் இந்தியாவில் இயற்றப்படவில்லை. மாறாக மொழி, இனம், ஜாதி, சமயம், கலாச்சாரம், பண்பாடு, மாநிலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் திருமணம் தொடர்பான சடங்குகள் வேறுபடுகின்றன. எனவே மதங்களை அடிப்படையாகக் கொண்டு, தனித்தனியாக திருமணச் சட்டங்கள் இயற்றப்பட்டு, அவைகளே நடைமுறையில் உள்ளன.

திருமணம் என்பது கிறித்தவம், இந்து மற்றும் இசுலாம் போன்ற மதங்களைப் பொறுத்தவரையில் ஒரு சமயச் சடங்காகவே கருதப்படுகிறது. இதன் காரணமாகவே இன்றைய சமூகத்தில் கொடுமையான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிற குழந்தைத் திருமண முறையானது, வெகுகாலமாகவே நம் சமூகத்தில் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

“சமூக சீர்திருத்தத்தின் தந்தை” என அழைக்கப்பட்ட, இராஜா ராம்மோகன்ராய் 1828ம் ஆண்டில் உருவாக்கிய பிரம்ம சமாஜம் என்ற அமைப்பின் வாயிலாக, குழந்தைத் திருமண முறையை எதிர்த்தல், பெண் கல்வி, விதவை மறுமணம், சாதி மறுப்புத் திருமணம் மற்றும் பெண் விடுதலையை ஆதரித்தல், பலதார மணம் மற்றும் பர்தா முறையை ஒழித்தல் போன்ற சமூக சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டார்.

மேலும் தனது சிறு வயதில், தம்மிடம் மிகுந்த அன்பு செலுத்திய தனது மூத்த சகோதரனின் மனைவி, அவரது கணவனின் மறைவுக்குப்பிறகு உறவினர்களால், வலுக்கட்டாயமாக உடன்கட்டை ஏற்றி கொலை செய்யப்பட்டதைக் கண்டதால் மிகவும் மனமொடிந்து போனார். இக்கொடிய நிகழ்வினை ஒழிக்கவேண்டி அவர் தொடர்ந்து பணியாற்றியதன் விளைவாகவே, 1829ம் ஆண்டில் வில்லியம்பெண்டிங் பிரபுவால், ‘‘சதி எனும் உடன்கட்டை ஏறுதல் முறை ஒழிப்புச்சட்டம்’’ இயற்றப்பட்டது.

இவரைத் தொடர்ந்து பொறுப்புக்கு வந்த, கேசவ சந்திர சென்னின் முயற்சியால் 1872ம் ஆண்டு, “சிறப்புத் திருமண சட்டம்” கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் சாதி மறுப்புத் திருமணம் மற்றும் விதவை மறுமணம் போன்ற சமூக சீர்திருத்த நிகழ்வுகளை ஆதரித்தது. மேலும் அச்சட்டத்தின்படி, குழந்தைத் திருமணமும், பலதார மணமும் ஒழிக்கப்பட்டது.

சட்டங்கள் பல இயற்றப்பட்டாலும், சமூகத்தில் குழந்தைத் திருமண முறையானது தொடர்ந்து நீடிக்கவே செய்தது. இன்றளவும் சமூகத்தில் அரசியல், சட்டம், சுதந்திரம், சமூகநீதி உள்ளிட்ட பல்வேறு தளங்களில் முன்மாதிரியாக விளங்கும், தேசப்பிதா என அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1883ல் தனது 13ஆவது வயதில் 13 வயதே கஸ்தூரிபா அவர்களையும், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 1897ல் தனது 14ஆவது வயதில் 7 வயதே ஆன செல்லம்மா அவர்களையும், பெரியார் ஈ.வெ. இராமசாமி 1898ல் தனது 19ஆவது வயதில் 13வயதே ஆன நாகம்மை அவர்களையும், இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் தந்தை டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் 1906ல், தனது 15ஆவது வயதில் 9 வயதே ஆன இராமாபாய் அவர்களையும் திருமணம் செய்துகொண்டார்கள். இப்படியாகக 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரையிலும், குழந்தைத் திருமண முறையானது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயல்பான ஒன்றாகவே விளங்கியிருக்கிறது என்பது இதன் மூலமாகப் புலனாகிறது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால், 1929ம் ஆண்டு, “குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்” கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி, முதல் முறையாக பெண்ணின் திருமண வயது 14 என்று வரையறை செய்யப்பட்டது. இச்சட்டத்தில் 1940ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் வாயிலாக, பெண்ணின் திருமண வயது 15 என்றும், 1978ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் வாயிலாக, பெண்ணின் திருமண வயது 18 என்றும் உயர்த்தப்பட்டது. 18க்கும் குறைவான வயதுடைய பெண்ணைத் திருமணம் செய்துகொடுக்கும் பெற்றோர்கள் மற்றும் அதற்குத் துணைபுரியும் உறவினர்கள், இச்சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

“குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், 1929”க்குப் பதிலாக, 2006ஆம் ஆண்டில், “குழந்தைத் திருமண தடைச் சட்டம்” கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி பெண்ணின் திருமண வயது 18 என்று உறுதி செய்யப்பட்டது. ஒருவேளை குழந்தைத் திருமணம் ஏற்கனவே நடந்திருந்தால், திருமணமான பெண் தனது 18 வயதை அடைந்ததிலிருந்து 2 ஆண்டுகளுக்குள், அந்த திருமணம் குறித்து நீதிமன்றத்தில் மனு செய்தால், அந்த திருமணமானது செல்லாது என்று நீதிமன்றம் அறிவிப்பு செய்யும். ஏற்கனவே நடந்த திருமணத்தின் வாயிலாக குழந்தை ஏதேனும் பிறந்திருந்தால், அந்த குழந்தைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், 2005ல் கூறப்பட்டுள்ளது போல, தேவையின் பொருட்டு அந்த பெண்ணிற்கு அவரது கணவன் அல்லது பெற்றோர் பராமரிப்புத் தொகையும், ஊக்கத்தொகையும் மற்றும் தேவையினைப் பொருத்து குடியிறுப்பு வசதியும் ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும்.

“இந்துத் திருமண சட்டம்” 1955ன் படியும், பெண்ணின் திருமண வயது 18 என உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிவு 7அ வின் படி, சுயமரியாதை மற்றும் சீர்திருத்தத் திருமணங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்றளவும் “இந்திய தண்டனைச் சட்டம், 1860” ஆனது, பெண்ணானவள் ஆணின் சொத்து என்றே கருதுகிறது. இந்திய அரசியலமைப்பு சாசனம், 1950” பிரிவு 21ன் படி, வாழ்வுரிமையானது நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் உத்தரவாதபடுத்தப் பட்டுள்ளது. உறிய வயதை அடைவதற்கும் முன்பாகவே திருமணம் செய்வதன் மூலமாக, மகப்பேறு காலத்தில் போதிய அளவுக்கு உடல் வளர்ச்சியடையாமல் இருக்கும் காரணத்தால், தாய் மற்றும், கருவின் உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலையே நிலவுகிறது.

18 வயதுக்கு முன்பாகத் திருமணம் செய்து கொடுப்பதன் மூலமாக இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் அடிப்படை உரிமையாக உறுதி செய்யப்பட்டுள்ள, தான் விரும்பியவரையே தன் வாழ்க்கைத்துணையாகத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், குழந்தைப்பருவத்தை அனுபவிக்கும் உரிமையும், பள்ளி மற்றும் கல்லூரியில் இடைநிறுத்தம் ஏற்படுவதன் மூலமாகக கல்விபெறும் உரிமையும் பறிக்கப்படுகிறது.

2005ம் ஆண்டின், மத்திய ‘மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின்’ தேசிய செயல்திட்டத்தின் ஒரு இலக்கானது, 2010ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் திருமணமுறைக்கு முழுமையாக முடிவுகட்டுதல் என்பதாகும். ஆனால் தற்போது 2010ல் பாதி ஆண்டை கடந்துவிட்டோம். குழந்தைத் திருமணமுறை இன்னமும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இலக்கு மட்டும் திட்ட வடிவில் அப்படியே உள்ளது.

‘அய்.நா.வின் சிறுவர் நிதியம்’ என்ற அமைப்பு 2009ம் ஆண்டில் பெண் குழந்தைகளின் நிலை குறித்து மேற்கொண்ட ஆய்வில், உலகில் மகப்பேறு காலத்தில், 20 முதல் 24 வயதையுடைய தாய்மார்களின் இறப்பு விகிதத்தில் இந்திய பெண்கள் 47% பேர். அதில் 18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் முடித்தவர்களில் 56% பேர் இந்திய கிராமங்களைச் சேர்ந்தவர்களாவார்கள். வாழ்க்கையின் போக்கை உணர அதற்குரிய வயதை அடையவேண்டியது அத்தியாவசியமானது ஆகும். அறியாப்பருவத்தில் நடக்கும் திருமணத்தால் மனமும், உடலும் பாதிப்புக்குள்ளாகும் என்பது இயற்கையானதாகும்.

150 ஆண்டுகளுக்கு முன்பாக இயற்றப்பட்ட, இந்திய தண்டனைச் சட்டம், 1860ன் ‘பிறன்மனைப் புணர்தல்’ குறித்துக் கூறும் பிரிவு 497 ஆனது, பெண் என்பவள் ஆணின் சொத்து என்ற பொருள்படக் கூறுகிறது. இந்த பிரிவின் படி, பிறன்மனைப் புணர்தல் சந்தர்பத்தில் அந்த மனைவி உடந்தைக் குற்றவாளியாகத் தண்டிப்பதற்கு உரியவராக மாட்டார். தொடர்புடைய மனைவிக்கு வழக்கு தொடுக்கும் உரிமை ஏதும் கிடையாது என்றும் ஆணுக்கு மட்டுமே வழக்கு தொடுக்கும் உரிமையானது உள்ளது என்றும் கூறுகிறது.

பெண்ணின் திருமண வயது 18 என உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில், பிரிவு 375ன் 5ஆவது உள்விதியானது, 16 வயதுக்குட்பட்ட பெண்ணின் சம்மதத்துடன் அல்லது சம்மதமின்றி உடலுறவு கொண்டால்தான் அது ‘வன்புணர்ச்சி’ என்று கூறுவதோடு மட்டுமின்றி, ஒருவர் தம் மனைவியோடு, அந்த மனைவி 15 வயதுக்குட்பட்டவாராக இல்லாதபோது கொள்ளும் உடலுறவு, வன்புணர்ச்சி அல்ல என்றும் கூறுகிறது.

‘வன்புணர்ச்சிக்கான தண்டனை’ குறித்துக் கூறும் பிரிவு 376 ஆனது, வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணானவர், அதைச்செய்தவரின் சொந்த மனைவியாகவும், 12 வயதிற்கும் கீழ்படாதவராகவும் இருந்தால், அதில் ஈடுபட்ட எவருக்கும் 2 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் அபராதமும் மட்டுமே விதிக்கப்படும் என்று கூறுகிறது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என கூறுகிறது. இதன்படி பார்த்தால் குழந்தைத் திருமண முறையும், திருமணம் வாயிலான வன்புணர்ச்சியும் இங்கே சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

2008ஆம் ஆண்டின், கட்டாய திருமணப் பதிவு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு, ஒவ்வொரு மாநிலத்திலும் முறையாக அமலாக்கம் செய்யப்பட வேண்டும். பொதுவாகவே திருமணப் பதிவின் போது வயது சான்றிதழ் சமர்பிக்க வேண்டிய தேவை உள்ளது. இதன் மூலமாய் குழந்தைத் திருமண முறையானது சட்ட ரீதியாக கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்படும். “குழந்தைத் திருமண தடைச் சட்டம்-2006” மதச்சார்பான சட்டங்களின்படி நடக்கும் திருமணங்களைக் குறித்துத் தெளிவாக எதுவும் கூறவில்லை. குழந்தைத் திருமணம் செல்லாது என சட்டத்தில் தீர்க்கமாக அறுதியிட்டுக் கூறுவதற்குப் பதிலாக, பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணே மனு செய்து, அத்திருமணத்தைச் செல்லாது என அறிவிப்பு செய்ய வேண்டும் என போராட வேண்டிய சூழலே நிலவுகிறது.

உரிய வயதை அடைந்த பிறகு, ஏற்கனவே நடந்த திருமணமானது செல்லாது என்று அறிவிக்க சமூகத்தில் பெண்களுக்கு இயல்பாக இருக்கும் தயக்கத்தை தவிர்க்கவும், அவர்களை திடப்படுத்தி ஊக்குவிக்கவும் அரசு வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படுவதன் மூலமாகவும், குழந்தைத் திருமணம் தொடர்பான நிகழ்வுகள் உறுதிபடுத்தப்படும் சூழல்களில், அதற்கான தண்டனைகள் கடுமையாக்கப்படுவதன் வாயிலாகவும்தான், சட்ட ரீதியாக பெண்களுக்கான உரிமைகள் முழுமையாக உத்தரவாதபடுத்தப்படும்.

இ.இ.இராபர்ட் சந்திரகுமார்.

Fried chicken மீது மோகம் கொண்டவரா?

KFC மற்றும் MCDONALD போன்ற புகழ்பெற்ற fried chicken பாஸ்ட் பூட் கடையில் விற்கப்படும் கோழி கறிகள் எவ்வாறு தயாரிக்கபடுகிறது என்பதை பார்பவர்கள் மறுமுறை மறந்துகூட kfc பக்கம் போக மாட்டார்கள்.
kfc கோழிகளில் தடவப்படும் மசாலாவில் ஒருவகை வாத்துகளின் கொழுப்புகள் சேர்க்கபடுகிறது.

இந்த கொழுப்பானது தயாரிக்கப்படும் விதம் கொடுமையானது. வாத்துகளுக்கு உணவுகள் கட்டாயமாக தினிக்கபடுகிறது. இவ்வாறு உட்கொள்ளும் வாத்துகள் சில நேரங்களில் செத்தும் போய் விடுகின்றன. இவ்வாறு தீவனம் திணிக்கப்பட்ட வாத்துகள் பெருத்து உப்பி போய், அதிக எடையுடன் ஆன பிறகு அவைகள் அறுக்கப்பட்டு அதிலிருந்து கொழுப்புகள் எடுக்கபடுகின்றன.

அந்த கொழுப்புகள் kfc கறி கோழிகளில் மசாலாவில் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. ஏற்கனவே சில இஸ்லாமிய அமைப்புகள் kfc ஹராம் உணவு என்று அறிவித்துள்ளது. எனவே இந்த உணவை தவிர்ப்பது சிறந்தது.

மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கே.எப்.சி பிரைட் சிக்கன் ஆகிய நிறுவனங்கள் தங்களின் விளம்பரத்தில் கொழுப்பற்றது, எந்த வித கலப்படமும் இன்றி இயற்கையானது மற்றும் 100 சதவீதம் சத்தானது என்று பல்வேறு பொய்களைக் கூறி விற்பனை செய்கின்றனர்.

இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை சோதனை செய்த போது அதில் அளவுக்கு அதிகமாக டிரான்ஸ் என்ற கொழுப்பு வகை, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாக தெரிந்திருக்கிறது. இந்த உணவுப் பொருட்களை குழந்தைகளும் இளம் வயதினரும் அதிகம் விரும்பி சாப்பிடுவதால் அதிகம் பேர் ஒபிசிடி, நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு ஆளாகின்றனர்.

எனவே இதுபோன்ற கலப்பட உணவு பண்டங்களை தவிர்க்க முயல வேண்டும் என்று ஆரோக்கிய வாழ்விற்கு அறிவுரை கூறியிருக்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த உணவுப் பொருட்களில் கலக்கப்படும் டிரான்ஸ் கொழுப்பு இதயத்தில் உள்ள வால்வுகளின் படிந்து பாதையை குறுகலாக்குகிறது. இதனால், விரைவிலேயே அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவற்கான வாய்ப்பை மிக சிறிய வயதிலேயே உருவாக்குகிறது என்றும் எச்சரிக்கின்றனர் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வகத்தினர்.

Life Style

Religious

Hinduism

History

Gallery

Special

Online jobs

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.